Saturday, March 26, 2022

Tamil Anthem Lyrics | மூப்பில்லா தமிழே தாயே | A R Rahman




புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் !
பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!

விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !
பிரிந்தோம் முன்னம் நாம்...
இணைந்தோம் எப்போதும் !

திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !
திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும் !
புறம் என்றால் போராய்ப்
பொங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !

உறங்காத பிள்ளைக்கெல்லாம் தாலாட்டாய்த் தமிழே கரையும் !
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும் !
கொடைவள்ளல் எழுவர் வந்தார்...
கொடை என்றால் உயிரும் தந்தார் ! படைகொண்டு பகைவர் வந்தால்...
பலபாடம் கற்றுச் சென்றார் !
மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார் !
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார் !

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.
அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

உதிர்ந்தோம் முன்னம் நாம்...
மலர்ந்தோம் எப்போதும் !
கிடந்தோம் முன்னம் நாம்...
கிளைத்தோம் எப்போதும் !
தணிந்தோம் முன்னம் நாம்...
எரிந்தோம் எப்போதும் !
தொலைந்தோம் முன்னம் நாம்... பிணைந்தோம் எப்போதும் !
விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று ! இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று !
காலங்கள் போகும்போது
மொழிசேர்ந்து முன்னால் போனால்... அழிவின்றித் தொடரும் என்றும் !
அமுதாகிப் பொழியும் எங்கும் !
விஞ்ஞானத் தமிழாய் ஒன்று...
வணிகத்தின் தமிழாய் ஒன்று...
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து !

மைஅச்சில் முன்னே வந்தோம் !
தட்டச்சில் தனியே நின்றோம் !
கணினிக்குள் பொருந்திக் கொண்டோம் !
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம் !
உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம் !
உள்வாங்கி மாறிச் செல்வோம் !
பின்வாங்கும் பேச்சே இல்லை...
முன்னோக்கிச் சென்றே வெல்வோம் !
புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்...
ஆடைகள் அணியும் புதிதாய் !
எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே வா வா..!
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வாவா வாவா...!

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

பழங்காலப் பெருமை பேசி...
படிதாண்டா வண்ணம் பூசி...
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே..!
நீ சீறி வாவா வெளியே !

வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில் !
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
'செயல்' என்றே
சொல்சொல் சொல்சொல்...!

சென்றிடுவோம் எட்டுத் திக்கும்...
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்...
இருக்கைகள்
தமிழுக்கமைப்போம்..!
ஊர்கூடித் தேரை இழுப்போம் !

மொழியில்லை என்றால் இங்கே...
இனமில்லை என்றே அறிவாய் !
விழித்துக்கொள் தமிழா முன்னே...!
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை..!

தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று !
உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று !!!...

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!


Amazon Top Deals on Mobiles and Accessories

No comments: